மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

எந்திரன்

கடந்த சில நாட்களாக, எந்திரன் திரைப்படப்பாடல்கள் எனது காதுகளில் ஒலித்து, மனத்தினில் பதிவுசெய்தாகிவிட்டது. முதல் முறை கேட்டபோது ஒரே சத்தமாக இருந்ததுபோல் இருந்தது... இப்போது, கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், அனைத்து பாடல் வரிகளும் நிறைவைத்தருகின்றன...
ஆகையால், அந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள் பிரியப்படுகிறேன். இதோ...





இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ

பல்லவி

யூ வானா சீல் மை கிஸ்
பாய் யூ கான்ட் டச் திஸ்
எவ்ரிபடி.... ஹிப்னாடிக்... ஹிப்னாடிக்...
சூப்பர் சோனிக் …
சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு
கூகிள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு
ஐ ரோபோ உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா ?

அயாம் எ சூப்பர் கேர்ள்
உன் காதல் லவ்வர் கேர்ள்

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீல கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீள பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் என்ஜின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
எந்நாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்

வாட்ச் மீ ரோபோ ஷேக் இட்
ஐ நோ யூ வானா பிரேக் இட்
தொட்டு பேசும் போதும்
ஷாக் அடிக்க கூடும் காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் பாட்டரி தான் தீரும்

சரணம்

மெமரியில் குமரியை
தனி சிறை பிடித்தேன்
ஷட்டௌனே செய்யாமல்
இரவினில் துடித்தேன்
சென்சார் எல்லாம் தேய தேய
நாளும் உன்னை படித்தேன்
உன்னாலே தானே – என்
விதிகளை மறந்தேன்

எச்சில் இல்லா எந்தன் முத்தம்
சர்ச்சை இன்றிக்கொள்வாயா ?
ரத்தம் இல்லா காதல் என்று
ஒத்தி போக சொல்வாயா ?
உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி
உலவியில் மொழிகளில் இந்திரன் நானடி
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே

ஹே … ரோபோ … மயக்காதே …

யூ வானா கம் அண்ட் கெட் இட் பாய்
ஒ! ஆர் யூ ஜஸ்ட் எ ரோபோ டாய்
ஐ டோன் வானா பிரேக் யூ
ஈவன் இப் இட் டேக்ஸ் டு
கைண்ட் ஆப் லைக் எ பிரேக் த்ரூ
யூ டோன் ஈவன் நீட் எ க்ளூ

யூ பீ மை மேன்ஸ் பேக் அப்
ஐ திங்க் யூ நீட் எ செக் அப்
ஐ கேன் மெல்ட் யுவர் ஹார்ட் டௌன்
மே பீ இப் யூ காட் ஒன்

வீ டூஇன் தாட் பார் ஏஜஸ்
சின்ஸ் இன் டைம் ஆப் சேஜஸ்

முட்டாதே ஓரம்போ
நீ என் காலைசுத்தும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ



காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை ?
பல்லவி

காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை ?
நியூட்ரான் எலெக்ட்ரான் – உன்
நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ?
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசைச்சிந்தனை
ஹையோ

சனா ! சனா !
ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா ?
நீ
நியூட்டன் நியூட்டனின் விதியா ?
உந்தன்
நேசம் நேசம் எதிர்வினையா ?
நீ
ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா
அழகின் மொத்தம் நீயா ?

நீ முற்றும் அறிவியல் பித்தன் - ஆனால்
முத்தம் கேட்பதில் ஜித்தன்

உன்னால்
தீம் தோம் மனதில் சத்தம்
தேன் தேன் தேன் இதழில் யுத்தம்
ரோஜா பூவில் ரத்தம்

ஹோக்க் பேபி ஹோ பேபி
செந்தேனில் ஒஸ்ஸாபி
ஹோக்க் பேபி ஹோ பேபி
மேகத்தில் பூத்த குலாபி

சரணம்

பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
கால்களைக் கொண்டுதான் ருசியறியும்
காதல் கொள்ளும் மனிதப்பூச்சி
கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஓடுகிற தண்ணியில் தண்ணியில்
ஆக்ஸிஜன் மிக அதிகம் !
பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்
ஆசைகள் மிக அதிகம் !

ஆசையே வா வா
ஆயிரம் காதலை ஐந்தே
நொடியில் செய்வோம் பெண்ணே வா வா

காதல்காரா !
நேசம் வளர்க்க ஒரு
நேரம் ஒதுக்கு எந்தன்
நெஞ்சம் வீங்கி விட்டதே !

காதல்காரி !
உந்தன் இடையை போல
எந்தன் பிழைப்பில் கூட
காதலின் நேரமும் இளைத்துவிட்டதே !

காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை ?
நியூட்ரான் எலெக்ட்ரான் – உன்
நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை ?
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசைச்சிந்தனை
அன்பே...


கிளிமஞ்சாரோ
பல்லவி

கிளிமஞ்சாரோ – மலைக்
கனிமஞ்சாரோ – கன்னக்
குழிமஞ்சாரோ
யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

மொகஞ்சதாரோ – உன்னில்
நொழஞ்சதாரோ பைய
கொழஞ்சதாரோ யாரோ யாரோ

ஆஹா … ஆஹா …

காட்டுவாசி காட்டுவாசி
பச்சையாக கடிப்பாயா
முத்தத்தாலே வேக வெச்சு
சிங்கபல்லில் உரிப்பாயா

ஆஹா … ஆஹா …

மலைப்பாம்பு போல வந்து
மான்குட்டிய புடிய்யா
சுக்குமிளகு தட்டி என்ன
சூப்பு வச்சு குடிய்யா

சேவலுக்கு
தங்கச்சியே என்கூடத்தான்
இருக்கா

ஆளுயர ஆலிவ் பழம்
அப்படியே எனக்கா ?

அக்கக்கோ – அடி
கின்னிக்கோழி
அப்பப்போ – என்ன
பின்னிக்கோடி
இப்பப்போ – முத்தம்
எண்ணிக்கோடி !

அக்கக்கோ – நான் கின்னிக்கோழி
அப்பப்போ – என்ன
பின்னிக்கோ நீ
இப்பப்போ – முத்தம்
எண்ணிக்கோ நீ

சரணம் 1

கொடி பச்சையே எலுமிச்சையே
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே

நூறு கோடி தசை – ஒவ்வொன்றிலும்
உந்தன் பேரே இசை !

இனிச்சக்கீரே அடிச்சக்கரே
மனச ரெண்டா மடிச்சுக்கிரே

நான் ஊற வைத்த
கனி – என்னை மெல்ல
ஆற வைத்து கடி !

வேர்வரை நுழையும்
வெயிலும் நான் – நீ
இலைத்திரை ஏன் இட்டாய் ?

உதட்டையும் உதட்டையும்
பூட்டிக்கொண்டு – ஒரு
யுகம் முடித்து திற அன்பாய் !

சரணம் 2

சுனைவாசியே சுகவாசியே
தோல்கருவி எனைவாசியே

தோல்குத்தாத பலா – ரெக்கைகட்டி
கால்கொண்டாடும் நிலா

மரதேகம் நான் மரங்கொத்தி நீ
வனதேசம் நான் அதில்வாசம் நீ

நூறு கிராம்தான் இடை – உனக்கு இனி
யாரு நான்தான் உடை !

ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை
மேய்ந்துவிடு மொத்தம்

பச்சை பசும்புல் நீயானால்
புலி புல்தின்னுமே என்ன குத்தம்?



அரிமா அரிமா














பல்லவி

இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும் ;!
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும் !
அடி அழகே ! உலகழகே ! இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம் !

அரிமா அரிமா – நானோ ஆயிரம் அரிமா – உன்போல் பொன்மான் கிடைத்தால் – யம்மா
சும்மா விடுமா ?

ராஜாத்தி – உலோகத்தில் ; ஆசைத்தீ – மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப்பார்த்தேன் அக்கினி அணையலையே !

உன் பச்சைத்தேனை ஊற்று என் இச்சைத்தீயை ஆற்று

அடி கச்சைக்கனியே பந்தி நடத்து கட்டில் இலை போட்டு …

சரணம் 1

சிற்றின்ப நரம்பு … சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே !
ராட்சசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண்ணுள்ளம் உன்னைக்கெஞ்சிற்றே

நான் மனிதன் அல்ல
அஹ்ரினையின் அரசன் நான்
காமுற்ற கணினி நான்
சின்ன சிறுசின் இதயம் தின்னும்
சிலிகான் சிங்கம் நான் …

எந்திரா …! எந்திரா …!

சரணம் 2

மேகத்தை உடுத்தும்
மின்னல்தான் நானென்று
ஐசுக்கே ஐஸை வைக்காதே !

வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோவேன்னாதே !

ஏ ஏழாம் அறிவே !
உள்மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய் ! நீ
உண்டு முடித்த மிச்சம் எதுவோ
அதுதான் நானென்றாய் …


பூம் பூம் ரோபோ-டா

பல்லவி

பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா
ஜூம் ஜூம் ரோபோ -டா ரோபோ -டா ரோபோ -டா

ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ
ஐசக் நியூ ட்டனின் லீலையோ ரோபோ
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையோ ரோபோ

ஹே ரோபோ .. யோ ரோபோ ..
ஹே இன்பா நண்பா கம்ஆன் லெட்ஸ் கோ


ரோபோ நீ அஹ்ரினையோ … சிட்டி நீ உயர்தினையோ …

மின்சாரம் உடலில் ரத்தம்
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம்

வாயுண்டு ஆனால் வயிறில்லை
பேச்சுண்டு மூச்சில்லை
நாடி உண்டு இருதயம் இல்லை
பவர்தான் உண்டு திமிரே இல்லை

சரணம் 1

சிக்கி முக்கி அக்னி வழி வழியே
ஒருவனின் காதலில் பிறந்தவனோ

ஏ … எஹ்கினிலே..
பூத்தவனோ …
எண்களின் காதலை சேர்த்தவனோ
திருமணத் திருநாள் தெரியும் முன்னே
நீ
எங்கள் பிள்ளையோ

சிட்டி சிட்டி ரோபோ – ஏ
சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் – நீ
பட்டுக் குட்டியோ

சரணம் 2

குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும்
காதலி இதுபோல்
கிடையாதோ ?

ஏ சொல்வதெல்லாம்
கேட்டுவிடும்
காதலன் இதுபோல்
அமையாதோ ?

தவமின்றி வரங்கள்
தருவதனால் நீ சோலைக்
கண்ணனோ ?

ஆட்டோ ஆட்டோக்காரா – ஏ
ஆட்டோமேடிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு – உன்
ஆட்டோகிராப் க்கா



புதிய மனிதா பூமிக்கு வா!

பல்லவி

புதிய மனிதா பூமிக்கு வா!

எஹ்கை வார்த்து
சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்டிஸ்கில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

மாற்றம் கொண்டு வா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று
எல்லா உயிர்க்கும்
நன்மையாயிரு

எந்த நிலையிலும்
உண்மையாய் இரு

எந்திரா .. எந்திரா ..
என் எந்திரா

சரணம் 1

நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறுமொழி
நீ பெற்றது நூறு மொழி
ஈரல் கணையம் துன்பமில்லை
இதயக்கோலாறேதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரன் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லாம்மரிக்கும்
அறிவில் பிறந்தது
மரிப்பதே இல்லை

இதோ
என் எந்திரன்
இவன் அமரன்

சரணம் 2

நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் – மகனே
ஆண் பெற்றவன் ஆண் மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞான ஒளி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது
பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி
தமிழ் அல்லவா !

ரோபோ ரோபோ
பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு
அடிமை அல்லவா !

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஒன்னாப்பு

நன்றாக நினைவிருக்கிறது.... எனக்கு ஐந்து வயது ஆகுமுன்னே, என்னை ஒன்னாவது வகுப்பில் (ஒன்னாப்பில்) சேர்த்துவிட்டார்கள். என்னை தினமும் எனது அக்கா பள்ளிக்கு இழுத்துச் செல்வார்கள்... கூட்டிச்சென்றார்கள் என்றால் உண்மையை மறைத்ததுபோல் ஆகிவிடும். பள்ளிக்கொடம் வரைக்கும் தர தரன்னு அவுங்க முழு பலத்தையும் உபயோகித்து இழுத்துப்போவார்கள். நானும் எனது முழு பலத்தையும் உபயோகித்து (நான் மட்டும் என்ன சளைத்தவனா? அவுக தம்பிதானே... ஹஹா) கால் ரெண்டையும் தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு ஒரு அடிகூட எடுத்துவைக்காமல் அவங்ககூடவே இழுபட்டுக்கிட்டு போவேன் (என்னதான் இருந்தாலும் நான் சின்னப்புள்ளதானே... ஹிஹி)

அங்க பள்ளிக்கொடத்துக்கிட்ட போன ஒடனேயே, எங்க ஒன்னாப்பு டீச்சர் (இப்படிப்பட்ட டீச்சர் பேரையே மறந்துப்புட்ட பாவி நானு) என்னயப்பாத்து ஒரு மொற மொறப்பாங்க பாருங்க... அப்புடியே பூனைக்குட்டி நம்ம மடிக்குள்ள நைஸா ஒக்கார்ற மாதிரி அப்பிடியே அடங்கிருவேன்.

இந்தமாரியே நான் ஒரு ரெண்டு மாசம் போனேன். அப்பறம் எல்லாம் சரியாப்போச்சு... நல்ல புள்ளயா மாறிட்டேன்..

என்னடா ரெண்டு மாசத்துல ரொம்ப நல்லா புள்ளயா மாறிட்டானேன்னு பாக்குறீங்களா (சினிமா வில்லன் மட்டும் கடேசி அஞ்சு நிமிஷத்துல நல்ல மனுஷனா மாறிரலாம் நாங்க மட்டும் மாறக்குடாதோ?)
அதுக்கும் ஒரு காரணம் இருந்துச்சு. அது என்னான்னா...

பழைய கொசுவர்த்திச் சுருள் நீங்களே போட்டுக்கங்க ப்ளீஸ்... எனக்கு அவசரத்துக்கு கெடக்கல..

எங்க ஒன்னாப்புல அப்பத்தான் புதுசா ஒரு பய சேர்ந்திருந்தான். அவன் பேரு இளமாறன். எங்க டீச்சர் அங்கங்க போற அஞ்சு நிமுசத்துல கூட வாயப்பொளந்துகிட்டு தூங்கிருவான்... அப்ப எங்களுக்கு வெளயாட்டே, அவன் வாய்க்குள்ள ஈய அடிச்சு போடுறதுதான்... அதுகூட எங்களுக்கு பெரிய விஷயம் இல்ல.. அதையும் தாண்டி அந்த ஈய போட்டோனே, அப்படி ஞவ் ஞவ்-னு மென்னு திம்பான் பாருங்க... அப்பத்தான் விழுந்து விழுந்து சிரிப்போம்... இப்படியே அவன் தின்னு தின்னு எங்க ஊர்ல ஈப்பஞ்சமே வந்துருச்சுனா பாத்துக்கங்க!

இப்படியா ஒன்னாப்பு ஓடிப்போச்சு... ரெண்டாப்புல போய் சேந்தோம். ஒருநாள் வாத்தியாரு பாடம் நடத்திக்கிட்டுருந்தப்பதான்....

சிறுகுடி

முதலில் இந்த வலைப்பதிவின் பெயர்க்காரணத்தை அனைவருக்கும் கூறிக்கொள்ள விழைகிறேன்...

சிறுகுடி என்பது எங்கள் அழகிய பசுமையான கிராமத்தின் பெயர். "கிரேட் சிறுகுடி" என்பது எங்கள் ஊர் பெருமையைப் பற்றி அனைத்துலகமும் கூறுவது...
வந்து கண் குளிரக்காணுங்கள், உங்களுக்கே எங்கள் ஊரைப்பற்றி புரியும்.

வெல்கம் டு சிறுகுடி.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

நண்பர்களுக்கு வணக்கம்.

ஏதோ ஒரு வேகத்தில் இந்த ப்ளாக்-ஐ ஆரம்பித்துவிட்டேன்... பிறகு ஒரு நான்கு நாட்கள் இதனை திறக்கவே முடியாமல் சிரமப்பட்டேன்... ஏன்னா, எனக்கு மறுபடி எப்படி திறப்பது என்று தெரியவில்லை, அதிலும் முக்கியமான கூத்து இந்த வலைப்பதிவிற்கு என்ன பேர் வச்சேன் என்றே மறந்துவிட்டேன்... அப்புறம், சரி, இதை ஆரம்பித்தது யாருக்கு தெரியப்போகிறது என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்... ஆனால், இன்று சிலப்பல மாதங்கள் கழித்து, எப்படியோ யோசித்து, முயற்சி செய்து திறந்து பார்த்தால், அடேங்கப்பா.... நாலு நண்பர்கள் எனக்கு ஆரம்ப உற்சாகம் பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறார்கள்... எனக்கே மிகவும் வெட்கமாகப்போய்விட்டது... ச்சே...

இனி நான் எழுதுகிறேன் நண்பர்களே...
(என்னமோ பெரிய எழுத்தாளர் எழுதுவதை நிறுத்திவிட்டு, திரும்ப வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கேற்ப, " இனி நான் எழுதுகிறேன் நண்பர்களே..." என்று நான் பில்டப் கொடுப்பதுபோல் இருந்தாலும், நான் அப்படீல்லாம் இல்லை என்று உத்திரவாதத்துடன் சொல்லிக்கொள்கிறேன் நண்பர்களே.... ஹிஹி)