மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 7 அக்டோபர், 2010
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று பிறந்த நாள் காணும் என் அன்பு மாப்பிள்ளை உனக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நீ நல்ல பெயரோடும், புகழோடும் உன் குடும்பத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் மாப்ளே...
புதன், 6 அக்டோபர், 2010
குணா கமல் சொல்றது மாதிரி...
அது என்னமோ தெரியல... என்ன மாயமோ தெரியல...
எனக்கு மூணாப்பு படிச்சது மட்டும் ஞாபகமே இல்ல...! மூனாப்பு எங்க பள்ளிக்கொடத்துல எந்தப்பக்கம் இருந்ததுன்னு கூட ஞாபகம் வரவே மாட்டேங்கிது.. ஒருவேள நான் மூனாப்பே படிக்காம நேரா நாலாப்புக்கு போயிட்டேனோ?!!? டபுள் ப்ரோமொட்டட் மாதிரி எதுவும் நடந்துச்சோ? அப்படின்னெல்லாம் யோசிச்சு பாத்துட்டேன். ஆனா நான் படிச்சு கிழிச்சதுக்கு, அது வேறயா அப்படின்னு இந்த இன்னொரு பக்கம் இருக்கிற நியாயமான மனசு என்னயப்போட்டு அடிச்சதுல, அந்த மாதிரி டபுள் ப்ரோமோசன் எல்லாம் ஒன்னும் இல்லைன்னு தெளிவா தெரிஞ்சு போச்சு... அப்புறம் எங்கதான் போயி தொலஞ்சிச்சு இந்த மூனாப்பு ஞாபகம் எல்லாம்!
இல்ல, "ஒரு வருஷம் டெர்ம் மெமரி லாஸோ?"
நல்லா மண்டயப்போட்டு கொடஞ்சு, கொண்டுவர ட்ரை பண்றேன்.
அதுவரைக்கும் பாய்.. பாய்...
ரெண்டாப்பு
ம்ம்ம்... ஒருவழியா அடுச்சுபிடுச்சு ஒன்னாப்பு டீச்சருக்கிட்ட இருந்து தப்பிச்சு ரெண்டாப்பு வந்தாச்சு. ஒருநாள் வாத்தியார் பாடம் நடத்திக்கிட்டு இருந்தப்ப, திடீர்னு, நம்ம இளமாறன் பயலோட அப்பா வந்தாரு. அவனுக்கு என்னமோ ஒரு வியாதி இருக்குறதாகவும், அவன மதுரையில போயி படிக்க வச்சுக்கிட்டே வைத்தியம் பார்க்கப் போறதாகவும் வாத்தியாருக்கிட்ட சொல்லிக்கிட்டு அவன கூட்டிக்கிட்டு போயிட்டாரு.. எங்களுக்கெல்லாம், ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும், இன்னொரு பக்கம் "அய்யய்யோ! இந்தப்பய போயிட்டான்ன யாரு வாயில ஈயப் போட்டு வெளையாடுறது"ங்குற கவலைதான் அதிகம். ஒரு அவங்க அப்பா பள்ளிக்கொடத்துக்கு வந்து.
அடுத்து மோசஸின் வருகை...
என்னடா திடீர்னு பைபிள்ல இருந்து என்னத்தையோ எடுத்து சொல்றானேன்னு பயப்புடாதீங்க...
அதாவது அன்னைக்கி மோசஸ்-னு ஒரு பையன அவங்க அப்பா பள்ளிக்கொடத்துக்கு கூட்டிக்கிட்டு வந்து வாத்தியாருக்கிட்ட சொல்லி சேத்து விட்டுட்டு போனாரு. அவன பாக்க பூனைக்குட்டி மாதிரி அமைதியா ரொம்ப நல்ல புள்ளயா மொத வரிசைல ஒக்காந்திருந்த எம்பக்கத்துல வந்து ஒக்காந்தான். நானும் சும்மா லேசா ஒரு சிரிப்பா சிரிச்சு வச்சேன்.
அதே நாள்ல இன்னொரு பையன அவனோட அப்புத்தா வந்து சேத்துவிட்டுட்டு போனாங்க... அவன் பேரு அருள் அப்படின்னு அவங்க அப்புத்தா சொன்னாங்க.. அதோட இல்லாம அவன் அமரிக்காவுல பொறந்தவன். அவுக அப்பா அம்மா கொஞ்ச நாள் இங்க படிக்கட்டும்னு சொல்லி சேத்துவிட சொன்னாக அப்படின்னும் ஒரு பில்ட் அப் அந்த கெழவி விட்டுட்டு போச்சு. (அது வேற யாரும் இல்ல... எங்க சொந்தக்கார கெழவிதான்! அது சொன்னதும் உண்மைதான்)
என்னமோ தெரியல.. அதுல இருந்து அந்த பயல பாக்கவே பிடிக்கல... (அதுல வேற அவன் செகப்பா கொலு கொலு-ன்னு வேற இருந்தானா... அதான்! ஹிஹி) "என்னமோ பெரிய பந்தா பண்ணிக்கிராக" அப்பிடின்னு அவன்கிட்ட லேசாக்கூட சிரிக்கல... உண்மைய சொல்லனும்னா அந்த வயசுல பந்தா-ன்னா என்னனே தெரியாது.. இருந்தாலும் அப்ப ஏதோ தோனுச்சு.. அதுக்கு பின்னாடி நானும் மோசஸும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ் ஆயிட்டோம்.. அந்த அருள் பயலும் வந்து வந்து பேசுவான்.. ஆனா, நாங்க அவன் கூட வெளையாடவே மாட்டோம். அப்பவே அப்பிடி ஒரு ரப்பு...
அப்புறம் ஒரு ஆறுமாசத்துலயே அவன் பள்ளிக்கொடத்த விட்டு வெலகிட்டான். இருந்தாலும் எங்களுக்கு அந்த பாதிப்பு ஒண்ணுமே இல்ல...
இப்பவும்கூட அருள் அமெரிக்காவுலதான் இருக்கான் என கேள்விப்பட்டேன்.. இதைக்கூட அவன் படிக்க நேரிடும். அவனுக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியல... ம்ம்ம் பார்ப்போம்...
சரி சரி மூணாப்புக்கு போவோமா?
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
எந்திரன்
கடந்த சில நாட்களாக, எந்திரன் திரைப்படப்பாடல்கள் எனது காதுகளில் ஒலித்து, மனத்தினில் பதிவுசெய்தாகிவிட்டது. முதல் முறை கேட்டபோது ஒரே சத்தமாக இருந்ததுபோல் இருந்தது... இப்போது, கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், அனைத்து பாடல் வரிகளும் நிறைவைத்தருகின்றன...
ஆகையால், அந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள பிரியப்படுகிறேன். இதோ...
ஆகையால், அந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள பிரியப்படுகிறேன். இதோ...
கிளிமஞ்சாரோ |
பல்லவி |
கிளிமஞ்சாரோ – மலைக் |
கனிமஞ்சாரோ – கன்னக் |
குழிமஞ்சாரோ |
யாரோ யாரோ |
ஆஹா … ஆஹா … |
மொகஞ்சதாரோ – உன்னில் |
நொழஞ்சதாரோ பைய |
கொழஞ்சதாரோ யாரோ யாரோ |
ஆஹா … ஆஹா … |
காட்டுவாசி காட்டுவாசி |
பச்சையாக கடிப்பாயா |
முத்தத்தாலே வேக வெச்சு |
சிங்கபல்லில் உரிப்பாயா |
ஆஹா … ஆஹா … |
மலைப்பாம்பு போல வந்து |
மான்குட்டிய புடிய்யா |
சுக்குமிளகு தட்டி என்ன |
சூப்பு வச்சு குடிய்யா |
சேவலுக்கு |
தங்கச்சியே என்கூடத்தான் |
இருக்கா |
ஆளுயர ஆலிவ் பழம் |
அப்படியே எனக்கா ? |
அக்கக்கோ – அடி |
கின்னிக்கோழி |
அப்பப்போ – என்ன |
பின்னிக்கோடி |
இப்பப்போ – முத்தம் |
எண்ணிக்கோடி ! |
அக்கக்கோ – நான் கின்னிக்கோழி |
அப்பப்போ – என்ன |
பின்னிக்கோ நீ |
இப்பப்போ – முத்தம் |
எண்ணிக்கோ நீ |
சரணம் 1 |
கொடி பச்சையே எலுமிச்சையே |
உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே |
நூறு கோடி தசை – ஒவ்வொன்றிலும் |
உந்தன் பேரே இசை ! |
இனிச்சக்கீரே அடிச்சக்கரே |
மனச ரெண்டா மடிச்சுக்கிரே |
நான் ஊற வைத்த |
கனி – என்னை மெல்ல |
ஆற வைத்து கடி ! |
வேர்வரை நுழையும் |
வெயிலும் நான் – நீ |
இலைத்திரை ஏன் இட்டாய் ? |
உதட்டையும் உதட்டையும் |
பூட்டிக்கொண்டு – ஒரு |
யுகம் முடித்து திற அன்பாய் ! |
சரணம் 2 |
சுனைவாசியே சுகவாசியே |
தோல்கருவி எனைவாசியே |
தோல்குத்தாத பலா – ரெக்கைகட்டி |
கால்கொண்டாடும் நிலா |
மரதேகம் நான் மரங்கொத்தி நீ |
வனதேசம் நான் அதில்வாசம் நீ |
நூறு கிராம்தான் இடை – உனக்கு இனி |
யாரு நான்தான் உடை ! |
ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை |
மேய்ந்துவிடு மொத்தம் |
பச்சை பசும்புல் நீயானால் |
புலி புல்தின்னுமே என்ன குத்தம்? |
அரிமா அரிமா |
பல்லவி |
இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும் ;! |
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில் நிலவு நிலவு தலை முட்டும் ! |
அடி அழகே ! உலகழகே ! இந்த எந்திரன் என்பவர் படைப்பின் உச்சம் ! |
அரிமா அரிமா – நானோ ஆயிரம் அரிமா – உன்போல் பொன்மான் கிடைத்தால் – யம்மா |
சும்மா விடுமா ? |
ராஜாத்தி – உலோகத்தில் ; ஆசைத்தீ – மூளுதடி |
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப்பார்த்தேன் அக்கினி அணையலையே ! |
உன் பச்சைத்தேனை ஊற்று என் இச்சைத்தீயை ஆற்று |
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து கட்டில் இலை போட்டு … |
சரணம் 1 |
சிற்றின்ப நரம்பு … சேமித்த இரும்பில் |
சட்டென்று மோகம் பொங்கிற்றே ! |
ராட்சசன் வேண்டாம் |
ரசிகன் வேண்டும் |
பெண்ணுள்ளம் உன்னைக்கெஞ்சிற்றே |
நான் மனிதன் அல்ல |
அஹ்ரினையின் அரசன் நான் |
காமுற்ற கணினி நான் |
சின்ன சிறுசின் இதயம் தின்னும் |
சிலிகான் சிங்கம் நான் … |
எந்திரா …! எந்திரா …! |
சரணம் 2 |
மேகத்தை உடுத்தும் |
மின்னல்தான் நானென்று |
ஐசுக்கே ஐஸை வைக்காதே ! |
வயரெல்லாம் ஓசை |
உயிரெல்லாம் ஆசை |
ரோபோவை போபோவேன்னாதே ! |
ஏ ஏழாம் அறிவே ! |
உள்மூளை திருடுகிறாய் |
உயிரோடு உண்ணுகிறாய் ! நீ |
உண்டு முடித்த மிச்சம் எதுவோ |
அதுதான் நானென்றாய் … |
பூம் பூம் ரோபோ-டா |
பல்லவி |
பூம் பூம் ரோபோ-டா ரோபோ-டா ரோபோ-டா |
ஜூம் ஜூம் ரோபோ -டா ரோபோ -டா ரோபோ -டா |
ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ |
ஐசக் நியூ ட்டனின் லீலையோ ரோபோ |
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையோ ரோபோ |
ஹே ரோபோ .. யோ ரோபோ .. |
ஹே இன்பா நண்பா கம்ஆன் லெட்ஸ் கோ |
ரோபோ நீ அஹ்ரினையோ … சிட்டி நீ உயர்தினையோ … |
மின்சாரம் உடலில் ரத்தம் |
நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம் |
வாயுண்டு ஆனால் வயிறில்லை |
பேச்சுண்டு மூச்சில்லை |
நாடி உண்டு இருதயம் இல்லை |
பவர்தான் உண்டு திமிரே இல்லை |
சரணம் 1 |
சிக்கி முக்கி அக்னி வழி வழியே |
ஒருவனின் காதலில் பிறந்தவனோ |
ஏ … எஹ்கினிலே.. |
பூத்தவனோ … |
எண்களின் காதலை சேர்த்தவனோ |
திருமணத் திருநாள் தெரியும் முன்னே |
நீ |
எங்கள் பிள்ளையோ |
சிட்டி சிட்டி ரோபோ – ஏ |
சுட்டி சுட்டி ரோபோ |
பட்டி தொட்டி எல்லாம் – நீ |
பட்டுக் குட்டியோ |
சரணம் 2 |
குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும் |
காதலி இதுபோல் |
கிடையாதோ ? |
ஏ சொல்வதெல்லாம் |
கேட்டுவிடும் |
காதலன் இதுபோல் |
அமையாதோ ? |
தவமின்றி வரங்கள் |
தருவதனால் நீ சோலைக் |
கண்ணனோ ? |
ஆட்டோ ஆட்டோக்காரா – ஏ |
ஆட்டோமேடிக் காரா |
கூட்டம் கூட்டம் பாரு – உன் |
ஆட்டோகிராப் க்கா |
புதிய மனிதா பூமிக்கு வா! |
பல்லவி |
புதிய மனிதா பூமிக்கு வா! |
எஹ்கை வார்த்து |
சிலிகான் சேர்த்து |
வயரூட்டி உயிரூட்டி |
ஹார்டிஸ்கில் நினைவூட்டி |
அழியாத உடலோடு |
வடியாத உயிரோடு |
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி |
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி |
மாற்றம் கொண்டு வா |
மனிதனை மேன்மை செய் |
உனது ஆற்றலால் |
உலகை மாற்று |
எல்லா உயிர்க்கும் |
நன்மையாயிரு |
எந்த நிலையிலும் |
உண்மையாய் இரு |
எந்திரா .. எந்திரா .. |
என் எந்திரா |
சரணம் 1 |
நான் கண்டது ஆறறிவு |
நீ கொண்டது பேரறிவு |
நான் கற்றது ஆறுமொழி |
நீ பெற்றது நூறு மொழி |
ஈரல் கணையம் துன்பமில்லை |
இதயக்கோலாறேதுமில்லை |
தந்திர மனிதன் வாழ்வதில்லை |
எந்திரன் வீழ்வதில்லை |
கருவில் பிறந்த எல்லாம்மரிக்கும் |
அறிவில் பிறந்தது |
மரிப்பதே இல்லை |
இதோ |
என் எந்திரன் |
இவன் அமரன் |
சரணம் 2 |
நான் இன்னொரு நான்முகனே |
நீ என்பவன் – மகனே |
ஆண் பெற்றவன் ஆண் மகனே |
ஆம் உன் பெயர் எந்திரனே |
நான் என்பது அறிவு மொழி |
ஏன் என்பது எனது வழி |
வான் போன்றது எனது வெளி |
நான் நாளைய ஞான ஒளி |
நீ கொண்டது உடல் வடிவம் |
நான் கொண்டது |
பொருள் வடிவம் |
நீ கண்டது ஒரு பிறவி |
நான் காண்பது பல பிறவி |
ரோபோ ரோபோ பன்மொழிகள் கற்றாலும் |
என் தந்தை மொழி |
தமிழ் அல்லவா ! |
ரோபோ ரோபோ |
பல கண்டம் வென்றாலும் |
என் கர்த்தாவுக்கு |
அடிமை அல்லவா ! |
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010
ஒன்னாப்பு
நன்றாக நினைவிருக்கிறது.... எனக்கு ஐந்து வயது ஆகுமுன்னே, என்னை ஒன்னாவது வகுப்பில் (ஒன்னாப்பில்) சேர்த்துவிட்டார்கள். என்னை தினமும் எனது அக்கா பள்ளிக்கு இழுத்துச் செல்வார்கள்... கூட்டிச்சென்றார்கள் என்றால் உண்மையை மறைத்ததுபோல் ஆகிவிடும். பள்ளிக்கொடம் வரைக்கும் தர தரன்னு அவுங்க முழு பலத்தையும் உபயோகித்து இழுத்துப்போவார்கள். நானும் எனது முழு பலத்தையும் உபயோகித்து (நான் மட்டும் என்ன சளைத்தவனா? அவுக தம்பிதானே... ஹஹா) கால் ரெண்டையும் தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு ஒரு அடிகூட எடுத்துவைக்காமல் அவங்ககூடவே இழுபட்டுக்கிட்டு போவேன் (என்னதான் இருந்தாலும் நான் சின்னப்புள்ளதானே... ஹிஹி)
அங்க பள்ளிக்கொடத்துக்கிட்ட போன ஒடனேயே, எங்க ஒன்னாப்பு டீச்சர் (இப்படிப்பட்ட டீச்சர் பேரையே மறந்துப்புட்ட பாவி நானு) என்னயப்பாத்து ஒரு மொற மொறப்பாங்க பாருங்க... அப்புடியே பூனைக்குட்டி நம்ம மடிக்குள்ள நைஸா ஒக்கார்ற மாதிரி அப்பிடியே அடங்கிருவேன்.
இந்தமாரியே நான் ஒரு ரெண்டு மாசம் போனேன். அப்பறம் எல்லாம் சரியாப்போச்சு... நல்ல புள்ளயா மாறிட்டேன்..
என்னடா ரெண்டு மாசத்துல ரொம்ப நல்லா புள்ளயா மாறிட்டானேன்னு பாக்குறீங்களா (சினிமா வில்லன் மட்டும் கடேசி அஞ்சு நிமிஷத்துல நல்ல மனுஷனா மாறிரலாம் நாங்க மட்டும் மாறக்குடாதோ?)
அதுக்கும் ஒரு காரணம் இருந்துச்சு. அது என்னான்னா...
பழைய கொசுவர்த்திச் சுருள் நீங்களே போட்டுக்கங்க ப்ளீஸ்... எனக்கு அவசரத்துக்கு கெடக்கல..
எங்க ஒன்னாப்புல அப்பத்தான் புதுசா ஒரு பய சேர்ந்திருந்தான். அவன் பேரு இளமாறன். எங்க டீச்சர் அங்கங்க போற அஞ்சு நிமுசத்துல கூட வாயப்பொளந்துகிட்டு தூங்கிருவான்... அப்ப எங்களுக்கு வெளயாட்டே, அவன் வாய்க்குள்ள ஈய அடிச்சு போடுறதுதான்... அதுகூட எங்களுக்கு பெரிய விஷயம் இல்ல.. அதையும் தாண்டி அந்த ஈய போட்டோனே, அப்படி ஞவ் ஞவ்-னு மென்னு திம்பான் பாருங்க... அப்பத்தான் விழுந்து விழுந்து சிரிப்போம்... இப்படியே அவன் தின்னு தின்னு எங்க ஊர்ல ஈப்பஞ்சமே வந்துருச்சுனா பாத்துக்கங்க!
இப்படியா ஒன்னாப்பு ஓடிப்போச்சு... ரெண்டாப்புல போய் சேந்தோம். ஒருநாள் வாத்தியாரு பாடம் நடத்திக்கிட்டுருந்தப்பதான்....
அங்க பள்ளிக்கொடத்துக்கிட்ட போன ஒடனேயே, எங்க ஒன்னாப்பு டீச்சர் (இப்படிப்பட்ட டீச்சர் பேரையே மறந்துப்புட்ட பாவி நானு) என்னயப்பாத்து ஒரு மொற மொறப்பாங்க பாருங்க... அப்புடியே பூனைக்குட்டி நம்ம மடிக்குள்ள நைஸா ஒக்கார்ற மாதிரி அப்பிடியே அடங்கிருவேன்.
இந்தமாரியே நான் ஒரு ரெண்டு மாசம் போனேன். அப்பறம் எல்லாம் சரியாப்போச்சு... நல்ல புள்ளயா மாறிட்டேன்..
என்னடா ரெண்டு மாசத்துல ரொம்ப நல்லா புள்ளயா மாறிட்டானேன்னு பாக்குறீங்களா (சினிமா வில்லன் மட்டும் கடேசி அஞ்சு நிமிஷத்துல நல்ல மனுஷனா மாறிரலாம் நாங்க மட்டும் மாறக்குடாதோ?)
அதுக்கும் ஒரு காரணம் இருந்துச்சு. அது என்னான்னா...
பழைய கொசுவர்த்திச் சுருள் நீங்களே போட்டுக்கங்க ப்ளீஸ்... எனக்கு அவசரத்துக்கு கெடக்கல..
எங்க ஒன்னாப்புல அப்பத்தான் புதுசா ஒரு பய சேர்ந்திருந்தான். அவன் பேரு இளமாறன். எங்க டீச்சர் அங்கங்க போற அஞ்சு நிமுசத்துல கூட வாயப்பொளந்துகிட்டு தூங்கிருவான்... அப்ப எங்களுக்கு வெளயாட்டே, அவன் வாய்க்குள்ள ஈய அடிச்சு போடுறதுதான்... அதுகூட எங்களுக்கு பெரிய விஷயம் இல்ல.. அதையும் தாண்டி அந்த ஈய போட்டோனே, அப்படி ஞவ் ஞவ்-னு மென்னு திம்பான் பாருங்க... அப்பத்தான் விழுந்து விழுந்து சிரிப்போம்... இப்படியே அவன் தின்னு தின்னு எங்க ஊர்ல ஈப்பஞ்சமே வந்துருச்சுனா பாத்துக்கங்க!
இப்படியா ஒன்னாப்பு ஓடிப்போச்சு... ரெண்டாப்புல போய் சேந்தோம். ஒருநாள் வாத்தியாரு பாடம் நடத்திக்கிட்டுருந்தப்பதான்....
சிறுகுடி
முதலில் இந்த வலைப்பதிவின் பெயர்க்காரணத்தை அனைவருக்கும் கூறிக்கொள்ள விழைகிறேன்...
சிறுகுடி என்பது எங்கள் அழகிய பசுமையான கிராமத்தின் பெயர். "கிரேட் சிறுகுடி" என்பது எங்கள் ஊர் பெருமையைப் பற்றி அனைத்துலகமும் கூறுவது...
வந்து கண் குளிரக்காணுங்கள், உங்களுக்கே எங்கள் ஊரைப்பற்றி புரியும்.
சிறுகுடி என்பது எங்கள் அழகிய பசுமையான கிராமத்தின் பெயர். "கிரேட் சிறுகுடி" என்பது எங்கள் ஊர் பெருமையைப் பற்றி அனைத்துலகமும் கூறுவது...
வந்து கண் குளிரக்காணுங்கள், உங்களுக்கே எங்கள் ஊரைப்பற்றி புரியும்.
வெல்கம் டு சிறுகுடி.
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
ஏதோ ஒரு வேகத்தில் இந்த ப்ளாக்-ஐ ஆரம்பித்துவிட்டேன்... பிறகு ஒரு நான்கு நாட்கள் இதனை திறக்கவே முடியாமல் சிரமப்பட்டேன்... ஏன்னா, எனக்கு மறுபடி எப்படி திறப்பது என்று தெரியவில்லை, அதிலும் முக்கியமான கூத்து இந்த வலைப்பதிவிற்கு என்ன பேர் வச்சேன் என்றே மறந்துவிட்டேன்... அப்புறம், சரி, இதை ஆரம்பித்தது யாருக்கு தெரியப்போகிறது என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்... ஆனால், இன்று சிலப்பல மாதங்கள் கழித்து, எப்படியோ யோசித்து, முயற்சி செய்து திறந்து பார்த்தால், அடேங்கப்பா.... நாலு நண்பர்கள்
இனி நான் எழுதுகிறேன் நண்பர்களே...
(என்னமோ பெரிய எழுத்தாளர் எழுதுவதை நிறுத்திவிட்டு, திரும்ப வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கேற்ப, " இனி நான் எழுதுகிறேன் நண்பர்களே..." என்று நான் பில்டப் கொடுப்பதுபோல் இருந்தாலும், நான் அப்படீல்லாம் இல்லை என்று உத்திரவாதத்துடன் சொல்லிக்கொள்கிறேன் நண்பர்களே.... ஹிஹி)
செவ்வாய், 11 மே, 2010
இதுதான் ஆரம்பம்
எனக்கு முதன் முறை பள்ளிக்கு செல்லும் அனுபவத்தைப்போல் இருக்கிறது எனது இந்த ப்ளாக்-ஐ எழுத ஆரம்பிக்கும்போது....
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் என்ன, எதைப்பற்றி, எப்படி எழுதப்போகிறேன் என்றெல்லாம் எனக்குத்தெரியவில்லை. ஆனாலும் என் நண்பன் தேவா கொடுத்த தைரியத்தில் எழுதுகிறேன்...
எனக்குத்தெரிந்ததெல்லாம்....
நண்பர்கள்
நண்பர்கள்
நண்பர்கள்
அவ்வளவுதான். வேறொன்றுமில்லை யுவர் ஆனர்.
அதனால், அவர்களைப்பற்றி எழுதினால் என்ன என்று இப்போது தோன்றுகிறது...
ஸோ, எனது இந்த ப்ளாக் எனது பால்ய கால நண்பர்களின் நினைவுப்பக்கங்களிருந்து ஆரம்பிக்கப்போகிறது...
வாழ்த்துங்கள் நண்பர்களே!
வாழ்த்துபவர்களுக்கு... பிதாமகன் படத்தில் சொல்வதுபோல "படகோட்டி படத்துல, அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி, சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பா ப்ரீஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ .....
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் என்ன, எதைப்பற்றி, எப்படி எழுதப்போகிறேன் என்றெல்லாம் எனக்குத்தெரியவில்லை. ஆனாலும் என் நண்பன் தேவா கொடுத்த தைரியத்தில் எழுதுகிறேன்...
எனக்குத்தெரிந்ததெல்லாம்....
நண்பர்கள்
நண்பர்கள்
நண்பர்கள்
அவ்வளவுதான். வேறொன்றுமில்லை யுவர் ஆனர்.
அதனால், அவர்களைப்பற்றி எழுதினால் என்ன என்று இப்போது தோன்றுகிறது...
ஸோ, எனது இந்த ப்ளாக் எனது பால்ய கால நண்பர்களின் நினைவுப்பக்கங்களிருந்து ஆரம்பிக்கப்போகிறது...
வாழ்த்துங்கள் நண்பர்களே!
வாழ்த்துபவர்களுக்கு... பிதாமகன் படத்தில் சொல்வதுபோல "படகோட்டி படத்துல, அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி, சரோஜாதேவி யூஸ் பண்ணின சோப்பு டப்பா ப்ரீஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ .....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)