ஏதோ ஒரு வேகத்தில் இந்த ப்ளாக்-ஐ ஆரம்பித்துவிட்டேன்... பிறகு ஒரு நான்கு நாட்கள் இதனை திறக்கவே முடியாமல் சிரமப்பட்டேன்... ஏன்னா, எனக்கு மறுபடி எப்படி திறப்பது என்று தெரியவில்லை, அதிலும் முக்கியமான கூத்து இந்த வலைப்பதிவிற்கு என்ன பேர் வச்சேன் என்றே மறந்துவிட்டேன்... அப்புறம், சரி, இதை ஆரம்பித்தது யாருக்கு தெரியப்போகிறது என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன்... ஆனால், இன்று சிலப்பல மாதங்கள் கழித்து, எப்படியோ யோசித்து, முயற்சி செய்து திறந்து பார்த்தால், அடேங்கப்பா.... நாலு நண்பர்கள்
இனி நான் எழுதுகிறேன் நண்பர்களே...
(என்னமோ பெரிய எழுத்தாளர் எழுதுவதை நிறுத்திவிட்டு, திரும்ப வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கேற்ப, " இனி நான் எழுதுகிறேன் நண்பர்களே..." என்று நான் பில்டப் கொடுப்பதுபோல் இருந்தாலும், நான் அப்படீல்லாம் இல்லை என்று உத்திரவாதத்துடன் சொல்லிக்கொள்கிறேன் நண்பர்களே.... ஹிஹி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக